பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாத்துரை 41 இராமாயணம் படிக்காதவர்களாயிருக்க வேண்டும் அல்லது இப்படி ஈரோட்டு பக்கம்போய் வந்திருக்க வேண்டும், என்று கிராமத்து மக்கள் எந்த விளக் கத்தைத் தந்தாலும் நம்பமாட்டார்கள். எப்படி நம்புவார்கள்? அவர்கள் நம்பவேண்டியதை நம்ப மாட்டார்கள்; நம்பக்கூடாததை நம்புவார்கள். தெரிந்துகொள்ள அவசியமில்லாததைத் தெரிந்து கொண்டிருப்பார்கள்; தெரிந்து கொள்ளவேண் டியதைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள். அமெரிக்கா வின் தலைநகரம் எது தெரியுமா? தெரியாது. ருஷ் யாவின் தலைநகரம் எது தெரியுமா ? தெரியாது. பெர்லின் எங்கு இருக்கிறது, தெரியுமா? தெரியாது. பிரிட்டனின் பிரபல தொழிற்சாலை எது, தெரியுமா? தெரியாது. மடகாஸ்கர் எங்கிருக்கிறது, தெரியுமா? தெரியாது. கடலுக்குள் போகிற கப்பல் தெரி ம? தெரியாது. சரி, எமதர்மனுடைய வாகனம் எது தெரியுமா ? "அதாங்க எருமைக் கடா என்று கூறுவார்கள். எப்படி இருக்கிறது அவர் கள் அனுபவம்? எவ்வளவு வேறுபாடு நம்முடைய நினைப்புக்கும் அவர்களுடைய நினைப்புக்கும்? பிர பல தலைநகரங்களைப்பற்றி, பிரபல தொழிற்சாலை களைப்பற்றி, பிரபல விஞ்ஞான சாதனங்களைப், பற்றி தெரிந்துகொண்டிராதவர்கள் மேலோகத்தி லுள்ள எமனுடைய வாகனத்தைப்பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தெரிந்துகொள்ள வேண்டி யதைத் தெரிந்துகொள்ளாதது பற்றி வெட்கப் படமாட்டார்கள்; தெரிந்துகொள்ள ஆசைப் படவும் மாட்டார்கள். 33