பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


மாடவீதிகள்

அமைப்பு முறை

கோயிலமைப்பிலும் திசை முறைகள், இடமுறைகள் போன்ற வரன்முறைகள் உண்டு. ஊருக்கு வடகிழக்கில் சிவன் கோயிலும், மேற்கே விஷ்ணு கோயிலும், தெற்கே முருகன் கோயிலும், கிழக்கே சூரியன் கோயிலும், தென் மேற்கு மூலையில் ஐயனார், பிள்ளையார் கோயில்களும், தென்கிழக்கே காளி கோயிலும், வடக்கே குபேரன், ஏழு கன்னிமார் கோயில்களும் நிர்மாணிக்கப்படலாம் என நகரமைப்புக் கலை விதிகள் உள்ளன.18

கிராமத்தின் மேற்கே சமணக் கோயில்களைக் கட்டலாம். ஊரின் குடியிருப்பு வீடுகள் தவிர மன்றம், அம்பலம், சாவடி, கோசாலை, பூந்தோட்டங்கள், இளமரக்கா, துறவியர் மடங்கள், அறக் கோட்டங்கள், மயானம், கடைகள் ஆகியவற்றுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒர் ஊரில் எந்தெந்தப் பகுதியில் யார் யார் குடியிருக்க வேண்டும் என்ற வரையறையும் நகரமைப் புக்குள் சொல்லப்பட்டிருக்கிறது.

பெருநகர் அமைப்பு

இனிப் பெருநகரங்களின் அமைப்பு அடுத்து வருகிறது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த இடம் என்பது நகரங்களும், கோநகரங்களும் ஆகும். அவை இடப் பரப்பினாலும், மக்கள் தொகையினாலும், வகையினாலும் பெருக்கமுடையவையாக அமைந்தன.

அ. சிறு நகரம்
ஆ. பெரு நகரம்
இ. கோநகரம் (இராசதானி)