இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
171
சிலப்பதிகாரப் பிரதியான ஏடு ஒன்றில் மனையறம் படுத்த காதையின் தொடக்கத்தில்,
- உரைசால் சிறப்பின் அரசு விழைத்திருவின்70
என்ற அடிக்கு முன்னர்,
- திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை
- ஒருதனி யாண்ட செருவடு திண்டோள்
- கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப்
- பாலை பாடிய பரிசிலன் றெடத்து
- மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்து
- அறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும்
- வீறுசால் ஞாலத்து வியலணி யாகி
- உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும்
- இல்லது மிரப்பு நல்லோர் குழுவும்
- தெய்வத் தானமும் திருந்திய பூமியும்
- ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும்
- விண்ணவர் உலகின் நண்ணிடு நகரமொடு
- எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த
எனவரும் அடிகள் காணப்படுதலைச் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய உ.வே.சா. ஐயரவர்கள் அடிக்குறிப்பில் தந்துள்ளார்கள். 71 மேற்படி அடிக்குறிப்புக் கருத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் அறுபதினாயிரம் குடும்பங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் - அறுபதினாயிரம் குடும்பங்கள் என்பது ஏறக்குறைய முந்நூறு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கலா மென்றும் கருதுகிறார் சதாசிவ பண்டாரத்தார். 72 இது 1969ம் ஆண்டின் சென்னைப் பெருநகர மக்கள் தொகைக்கு இணையானது என்றும் அவரே கூறுகிறார். 73