உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49


நற்பயன்

கட்டடம் கட்டிக்கொள்ள இருப்பவனும் கொத்தனாரும் கட்டப்பட இருக்கிற மனையில் போய் நின்றபின் ஏற்படும் நிமித்தங்களின் பயனை இனிக் காணலாம்:

மனைக்குரியோனும் சிற்பியும் நின்ற இடத்திற்கு வலப்பக்கமாகப் பல்லி செல்லுமானால் நற்பயன் விளையும்.12

முதலில் வலப்புறம் பல்லி சொல்லி அதன்பின் இடப் பக்கமும் தொடர்ந்து சொல்லுமானால் அம் மனைக்கு உரியோன் அரசனுக்கும் - ஆள்வோர்க்கும் மிகவும் வேண்டியவனாகவும், நல்வாழ்வு வாழ்பவனாகவும் இருப்பான்.

காட்சியில் படும் பிற

மனையில் சென்று நிற்கும்போதில் பின்வரும் உயிரினங்களைக் கண்டால் நற்பயனாகும்.

உயிரினம் பயன்
1. வெள்ளைப் புறா சீரும் சிறப்புமாக வாழ்வர்
2. வெள்ளைப்பசு
3. வெள்ளைக் காளை

பறண்டை என்னும் புள் பாடியபடியே வலமிருந்து இடமாகச் செல்வதைக் கண்டால் துயரம் நீங்கி நலம் பயக்கும். 13

பொருள் பயன்
1. மதுக்குடம்
2. மாமிசம்
3. பால்
4. நெய்
5. தண்ணிர் மிகவும் மேலான நல்
6. நல்லபுடைவை விளைவுகள் ஏற்படும்