இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
49
நற்பயன்
கட்டடம் கட்டிக்கொள்ள இருப்பவனும் கொத்தனாரும் கட்டப்பட இருக்கிற மனையில் போய் நின்றபின் ஏற்படும் நிமித்தங்களின் பயனை இனிக் காணலாம்:
மனைக்குரியோனும் சிற்பியும் நின்ற இடத்திற்கு வலப்பக்கமாகப் பல்லி செல்லுமானால் நற்பயன் விளையும்.12
முதலில் வலப்புறம் பல்லி சொல்லி அதன்பின் இடப் பக்கமும் தொடர்ந்து சொல்லுமானால் அம் மனைக்கு உரியோன் அரசனுக்கும் - ஆள்வோர்க்கும் மிகவும் வேண்டியவனாகவும், நல்வாழ்வு வாழ்பவனாகவும் இருப்பான்.
காட்சியில் படும் பிற
மனையில் சென்று நிற்கும்போதில் பின்வரும் உயிரினங்களைக் கண்டால் நற்பயனாகும்.
- உயிரினம் பயன்
- 1. வெள்ளைப் புறா சீரும் சிறப்புமாக வாழ்வர்
- 2. வெள்ளைப்பசு
- 3. வெள்ளைக் காளை
பறண்டை என்னும் புள் பாடியபடியே வலமிருந்து இடமாகச் செல்வதைக் கண்டால் துயரம் நீங்கி நலம் பயக்கும். 13
- பொருள் பயன்
- 1. மதுக்குடம்
- 2. மாமிசம்
- 3. பால்
- 4. நெய்
- 5. தண்ணிர் மிகவும் மேலான நல்
- 6. நல்லபுடைவை விளைவுகள் ஏற்படும்