இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
- 7. மங்கல மகளிர்
- 8. நிறைகுடம்
- 9. யானை
- 10. குதிரை
- 11. தேர்
- 12. ஒற்றை ஆடவன்
தீய பயன்
மனையில் போய் நிற்கும்போது பின்வருவன நிகழுமாயின் மனைகோலாமல் திரும்பிவிடவேண்டும் என்கிறது மனைநூல். 14
- 1. எறும்புகள் அணி அணியாகச் செல்லாது பிரிந்து சிதறிச் செல்வது.
- 2. கரையான்கள் பரவிக் கிடப்பது.
- 3. வண்டுகள் கண்டபடி மண்பரப்பைத் துளைத்துக் கெரண்டிருப்பது.
- 4. ஓணான் எதிரில் ஒடி வருவது.
பின் வருவோரைக் காணநேர்ந்தால் அந்த இடத்தில் மனை கோலுவோர் குடி சீரழியுமாதலால் மனைகோலுவதைத் தவிர்க்க வேண்டுமாம்.15
1. குடியன், 2. வலையன், 3. சுடுகாட்டு ஆண்டி, 4. முடமானவன், 5. செக்கு ஆட்டுபவன், 6. மூக் கறையன், 7. கூனன், 8. அந்தகன்.
இனி மனைகோலக் கருதிய இடத்தில் மண் பரப்பைத் தோண்டிப் பார்க்குங்கால் என்னென்ன தோன்றினால் என்னென்ன பலன் என்பது. 16
தவளை, அறனை பல்லி, சிலந்தி, நண்டு ஆகியவை தென்பட்டால் வீடு சிறப்படையும்.