பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குப் போகுமுன் பிள்ளையெலாம்-மனப் பாடமாய் இதனைச் செய்துவிட்டால், பள்ளியில் நோய்கள் அணுகாது-பிள்ளை பாதையை விட்டு விலகாது. பிள்ளைக் கலிதீர்க்க வந்ததெல்லாம்-கம் பிள்ளைகளாகவே வாழுதற்கு வள்ளியப் பாஇன்று பாடிவைத்த-காந்தி வள்ளல் கதைஒரு வாய்க்காலாம். கஞ்சிக்குப் போட்டிடும் உப்பினிலே-காம் கடலைக் கண்டு களிப்பதுபோல், காந்தியின் கதையைச் சிறிதாக்கி-இவர் கவியில் அகத்தியன் ஆகிவிட்டார் ! காந்தி மகானின் கதைபாடி-அதைக் கண்ணிர் வார்த்து வளர்த்ததற்குக் கைமேல் பலஇனக் கண்டுவிட்டேன்-அடிக் கன்றைக் கண்ட கதலியைப்போல். உள்ளுர்க் காரன் வள்ளியப்பா-தன் உள்ளம் உருகிச் சொல்லியபா, வள்ளி மணுளன் அருளாலே-என்றும் வாழிய, வாழிய புவிமேலே. -கொத்தமங்கலம் சுப்பு