பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இள்ளாத வயதிலே கோல்ஊன்றித் தளர்நடை போட்டு காங்திமகான் பொல்லாத வெறியர் மத்தியிலே புகுந்துமே அன்பைப் பரப்பினராம், என்னதான் காந்தி எடுத்துரைத்தும் "இந்திய நாட்டைப் பிரித்திடுவீர்" என்றுமே லீகினர் கூறிவந்தார். இம்மியும் விட்டுக் கொடுக்கவில்லை : கலகம் அடங்கினால் போதுமென்றே கடைசியில் இந்தியக் காங்கிரசின் தலைவர்கள் சம்மதம் தங்துவிட்டார், தாய்த்திரு காட்டைப் பிரிப்பதற்கே, பாரதம், பாகிஸ்தான் காடுகளாய்ப் பாகப் பிரிவினை செய்துவிட்டார் : வேறு வழியின்றி காந்தியுமே வேதனை தன்னைப் பொறுத்திருந்தார். 136