பக்கம்:பாற்கடல்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

293


அப்புறம் மாமி, மாமாவிடம் சொல்லி, மாமா எங்களுக்கு ஜாடை காட்டி (ஜாடைதான், ஆனால் அதில் எதிர்க்க முடியாத ஒரு அதிகாரம் இருப்பதை உணர்ந்தேன்), என் பிகு தளர்ந்து, அவர்கள் வெற்றி கண்டார்கள். உங்களிடம் சொல்லுகிறேன். உள்ளபடி வெற்றி கண்டது பூரிதான். நெய் வாசனைதான் மூக்கைத் துளைக்கிறதே!

இதற்குள் வெளியில் போயிருந்த பையன்கள், பாட்டில்களில் குடி ஜலத்துடன், கனக்கும் கூஜா சொம்புடன் திரும்பிவிட்டார்கள். தவிர, அவர்கள் கையில் பெரிய பெரிய தையல் இலைப் பார்சல்கள். அவற்றை அவிழ்த்து சுடச்சுட எங்களுக்கு ஆளுக்கு இரண்டு மெதுவடைகள் இப்போ மாதிரி வெறும் துளையை மட்டும் தாங்கும் வடையா?), மேலே கெட்டிச் சட்டினி. மறுபடியும் இரண்டு இட்டிலி சாம்பார் (அவர்கள் கூடக் கொண்டு போய்க் கொண்டு வந்த பெரிய எவர்ஸில்வர் தூக்கு டப்பாவைச் சொல்ல மறந்துவிட்டேனோ :) இப்போ சூடாக உருளைக்கிழங்கு மசாலாவைச் சுமந்துகொண்டு மறுபடியும் இரண்டு பூரி.

ஒருவழியாக டிபன் கடை முடிந்ததும் கூஜா சொம்பு திறக்கப்பட்டது. சேறாட்டம் காபி எங்களுக்கு ஒரு தம்ளர் வழங்கப்பட்டது. அப்பா, மண்டையிடியும் ஓய்ந்தது. வண்டியும் ஒருவழியாக முக்கி முனகிக் கொண்டு கிளம்பிற்று.

நான் என்னோடு கலந்து ஆலோசித்துக்கொண்டு, மாமா பிள்ளையோடு மண்டையோடு மண்டையை இடித்துக்கொண்டு (அந்த மந்திரிக்கு அப்போது வயது ஒன்பது) எனக்குள் ஒருவாறு ஒரு முடிவுக்கு வந்து, என் பர்ஸுக்குள் கைவிட்டுத் துழாவி ஒரு நாலணா வெள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/299&oldid=1534397" இலிருந்து மீள்விக்கப்பட்டது