பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 130 — இடையில் வைத்த சுவரை இடித்து வீதிகள் இடையில் திரைன்ய விலக்கி நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு! வானே இடிக்கும் மலைமேல்! ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்! ஏறி நின்று பாரடா எங்கும்; எங்கும் பாரடா இப்புவி மக்களே! பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்: என்குலம்' என்றுனத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு: மானிட சமுத்திரம் நானென்று கூவு! பிரிவிலை எங்கும்! பேத மில்லை! உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்! புகல்வேன் உடைமை மக்களுக் குப்பொது; புவியை நடத்து பொதுவில் நடத்து!’ எத்துணை எழுச்சி; எத்துணை உயர்ச்சி! எத்துணை விரிந்த எண்ணக் குவியல்! சடசட சடவெனச் சொற்கள் ஆட்சி! மடமட மடவெனும் கருத்து மாமழை! உணர்வு மின்னல்; உருட்டும் இடிகள்! இதைவிடப் பொதுமை என்ன வேண்டும்? புதுக்கருத் தெவர்தாம் புகன்றிடப் போவார்? வெறுப்பிலா திருந்து பொதுமையாய் விளக்கிளுல் மறுப்பிலா தவரை மாப்புல வோனுய். - ஏற்றுக் கொள்ளுவார்; இல்லெனின் தூற்றுவார்! மாற்றுக் கொள்கையர் மறுத்திட முடியுமா? "எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமையெலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே! - என்றே உரிமைப் பட்டையம் எழுதுவார்!