இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
– 144 — அடுத்துப், பாவேந்தர் ஒரு பகுத்தறி வுணர்வினர். ஆவலால் இதனையும் அவர் வா யாலே கேட்டு மகிழ்வோம்! 'குடிக்கவும் நீரற் றிருக்கும்-ஏழைக் கூட்டத்தை எண்ணுமல் கொடுந்தடி யர்க்கு மடங்கட்டி வைத்ததிளுலே-தம்பி வசங்கெட்டுப் போனது நமதுநன் டுை' ‘கடவுள் கடவுள் என்றெதற்கும் கதறுகின்ற மனிதர்காள்! கடவுள் என்ற நாமதேயம் சழறிடாத நாளிலும் உடைமை யாவும் பொதுமையாக உலகுநன்று வாழ்ந்ததாம்! உடைகமந்த கழுதைகொண் டுழைத்ததோர் நிலைமையும் உடைமை முற்றும் படையைஏவி அடையும் மன்னர் நிலைமையும் கடவுளான யாயின், அந்த உடை வெளுக்கும் தோழரைக் கடவுள்தான் முன்னேற்றுமோ? தன் கழுதைதான் முன்னேற்றுமோ? அடுத்துப், பாரதி தாசன் பைந்தமிழ் இனத்தையெந் நேரமும் காலமும் நிமையமும் காத்தான்! அவனின் காவல் எப்படிப் பட்டது? - அவன்குர லாலே அவனுளங் கேட்போம்! அவனின் சூளுரை ஆர்ப்பரிப் பிஃதாம்!