உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 164 — கட்டாயக் கல்வியொடு பணிவேண்டும் என்பான்! “கல்விதராக் கசடர்க்குத் துரக்குமரம்’ என்ருன்! திட்டமிட்டுத் தொழிலாளர் ஒன்றுபடல் வேண்டும், திங்குவரும் இல்லையென்ருல் என்றறிக்கை செய்வாட் 10.2 'வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம் கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்! கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் இன்றுவரை மூடிய தொழிற்சாலை முக்கோடி’-என்பான்! மட்டமெனத் தமிழ்மொழியை மதிக்கின்ற செயலே மடமையெனக் கடிந்தொதுக்கித் தமிழர்களைப் பார்த்துக் திட்டமிட்ட படைவேண்டும் தமிழ்காக்க என்ருன் தெருவிலுள்ள பலகைகளில் தமிழ்வேண்டும் என்ருன்சி 'வாணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங் கிலமா வேண்டும்? - மானுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்லல் வேண்டும்!” தனித்தமிழை வலியுறுத்தித் தமிழியக்கம் செய்தான்! தான்தொடக்கத் தெழுதிவிட்ட கலவைநடை போல இனித்தாளில் எழுதிடுவ தில்லையெனச் சொன்னன்! எம்மொழிக்கும் தமிழ்மொழியே தாய்மொழியென் ருர்த்தான்! தனித்தமிழை வற்புறுத்திப் பாவேந்தன் சொன்ன தங்கவரிப் பாடல்களை நம்மிளைஞர் பாடி பனித்தமிழை உலகமெலாம் பரப்பிடுதல் வேண்டும்! பாவேந்தன் பாடுகின்ருன் செவிமடுத்துக் கேட்பீர்! 'தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டையெல்லாம் கண்டறிந்த படிஅவற்றை மக்களெல்லாம் மறுக்கும்வண்ணம் கழற வேண்டும்'