உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

49

குரூரங்களையும் கொலைகளையும் அன்பும் கருணையும் வளரும் உள்ளங்களில் ஏற்கப் பழகியவள். இன்றும், நாய், பூனை போன்ற விலங்குகள், முதற்குட்டியின் முகம்கூடப் பாராமல் கவ்விக் கொன்று பசி தீர்ந்து வலிமை பெற்ற பிறகே அடுத்த குட்டிகளை ஈன்று நக்கிக் கொடுத்துப் பாசத்தைக் காட்டுகின்றன. இந்தப் பெண்மையை வெல்ல, ஆண் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, முயன்று வெற்றி பெற்றிருக்கிறான். மதங்கள், புராணங்கள், தத்துவங்கள் எல்லாம் மனங்கவரும் ஆண் ஆதிக்கக் கோட்பாடுகளைச் சாரமாகக் கொண்டவை. எனவே தன்னை ஒன்றுமில்லாத பூச்சியங்களாக்கும் அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்கள் முன்வர வேண்டும். பெண்களுக்குச் சாதி, மதம், இல்லை. அழிவைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. சாதி, மதம், ஆண் ஆதிக்க அடையாளங்களான அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்துப் பிரக்ஞைகளையும் உதறிவிட்டு, அழிவைத் தடுத்து நிறுத்த ஒன்று திரள வேண்டும்.


‘தினமணி’,
22.3.2003