பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 121

காட்டுபப்பன்றியின் இறைச்சியை உட்கொண்ட காரணத்தினாலே, அது சமிக்க முடியாத கடின உணவு ஆகையினாலே, பகவருக்கு வயிற்றுக்கடுப்பு உண்டாயிற்று. அதனை அவர் பிறர் அறியாதபடி அடக்கிக்கொண்டு, வழக்கம்போல நன்றி கூறும்பொருட்டுச் சுந்தனுக்கு அறிவுரை கூறியபிறகு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார். ஆனந்தரிடம், "குசிநகரம் செல்வோம் என்று கூறினார். ஆனந்தர் "அப்படியே" என்று கூறி குசிநகரம் நடந்தார். பகவன் புத்தருக்கு வயிற்றுக்கடுப்பு அதிகமாயிற்று. பொறுக்க முடியாத வலி வயிற்றில் ஏற்பட்டது. ஆகவே வழியிலேயே படுத்துக் கொள்ள விரும்பினார். "ஆனந்தா, மரத்தின் கீழே துணியை விரித்துப்போடு" என்றார். அனந்தர் மரநிழலில் துணியை விரித்துப் படுக்கை அமைத்தார். பகவன் புத்தர் வலது புறமாகச் சாய்ந்து படுத்தார். பிறகு நீர் வேட்கையாக இருந்தபடியால் ஆனந்தர் சென்று ஆற்றிலிருந்து கொண்டு வந்தநீரைப் பருகி விடாய் தீர்ந்தார்.

சிறிது இளைப்பாறிய பிறகு ககுத்த ஆற்றுக்குச்சென்று நீராடினார். பிறகு ஆற்றைக்கடந்த மாஞ்சோலையையடைந்து அங்கிருந்து மள்ளர் நாட்டைச் சேர்ந்த குசிநகரத்து உபவர்த்ன வனத்திற்குச் சென்றார். அங்கு இரண்டு சாலமரங்களுக்கு இடையில் துணியை விரிக்கச்சொல்லி வடக்கே தலைவைத்துவலது கைப்புறமாக சிங்கம் படுப்பதுபோல படுத்தார்.

அப்போது ஆனந்தருக்குப் பல செய்திகளைக் கூறினார். பசலன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தால் அவருக்கு என்னென்ன கடைசிச் சடங்குகள் செய்யவேண்டும் என்று ஆனந்தர் கேட்டார். அதற்குப் பகவர், "பிக்குகள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லறத்தைச் சேர்ந்த சாவக நோன்பிகள், செய்ய வேண்டியவற்றைச் செய்வார்கள்" என்று கூறி, உலகத்திலே தூபிகட்டிப் போற்றப்பட வேண்டியவர் நான்கு பேர் உளர்; அவர்கள் ததாகதர், பிரத்யேக புத்தர், அர்ஹந்தர், சக்கரவர்த்திகள் என்பவர். இவர்களுக்குச் சேதியம் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கினார்.

கடைசி இரவு

பகவன் புத்தர், பிறகு ஆனந்தரை அழைத்துக் குசி நகரத்துக்குச் சென்று அங்குள்ள மள்ளர்களுக்குத் தமது பரிநிர்வாணத்தைக் கூறி வரும்படி சொன்னார்: "இன்று இரவு கடையாமத்திலே ததாகதர் பரிதிர்வாணம் அடையப்போகிறார். ததாகதர் நமது நாட்டுக்கருகில்