பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயம் வெளுத்தது 343

அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாது. என்பது காயத்திரிக்குப் புரியும். சுசீலாவின் சுபாவமே

அலாதியானது. வாழ்க்கையை உணர்ச்சி வழியே பார்க்கக் கூடியவள்? மேலெழுந்தவாரியாக ரசித்துக்

கொண்டு போக அவளுக்குத் தெரியாது.

காயத்திரி அவளுடைய தலையை அன்போடு வருடிய வண்ணம் கூறினாள்: “நான் உன்னிடம் ஒன்று கேட் கிறேன்; கோபித்துக் கொள்ள மாட்டாயே!’ Li

சுசீலா தலையை அசைத்தாள். காயத்திரி கூறினாள்: உன் சுபாவத்தை இனியாவது மாற்றிக் கொண்டாக வேண்டும். மனத்துக்குள் மட்டும் அன்பு இருந்தால் போதாது. மனம் என்பது கண்ணாடிப் பாத்திரம் அல்ல; உள்ளே இருப்பதெல்லாம் வெளியே தெரிவதற்கு. எப் போது நீ ஹரியைக் காதலிப்பதாக ஒப்புக் கொண்டு விட்டாயோ, இனியாவது நீ அவனிடம் அன்பாக இருப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். அதை நாங்கள் நம்பியாக வேண்டும். அப்போதுதான் உன்னைப்பற்றிக் சொல்லி உன் காரியத்தை முடித்து வைக்க என்னால்

முடியும்.

ஆனால், இவையெல்லாம் நீயாக இஷ்டப்பட்டால் தான். அப்படி உன்னால் இயலாத பட்சத்தில் சொல்லி விடு; நானும் இதில் ஈடுபடுவதில் பயன் இல்லை. ஏனெனில், உன் காதலை நிறை வேற்றுவது என் கையில் மட்டும் இல்லை. ஹரியை, நானோ, பிறரோ சொல்லி இம்மாதிரி விஷயத்தில் பணிய வைக்க முடியாது. அது உன் அன்பினால் மட்டுமே ஆகக் கூடிய காரியம்.

நான் உனக்காகச் சிபாரிசு செய்யலாம். அப்பாவும் அம்மாவும், வசந்தியை நினைத்துக் கொண்டிருக்கிறார் கள். வசந்தி, ஹரியையே ஆதியிலிருந்து அடையத் துடிக்