பக்கம்:மயில்விழி மான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மயில்விழி மான்

"என்ன, மாமா? என்ன?" என்று கேட்டுக் கொண்டே நமச்சிவாயம் அருகில் உட்கார வந்தான்.

"அட பாவி! சண்டாளா! துரோகி! என்ன காரியம் செய்துவிட்டாய்?" என்று அவன் தோளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கித் தூரத் தள்ளினேன்.

நமச்சிவாயம் ஆவேசம் வந்தவன் போல், "அடே நீ யாரடா என்னைப் பிடித்துத் தள்ளுவதற்கு?" என்று பலமாகக் கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி வந்தான்.

என்னுடைய கோபம் எல்லையைக் கடந்து விட்டது. உடனே குதித்து எழுந்து நமச்சிவாயத்தின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, "அடே பாதகா. அவளுடைய வாழ்க்கையைத்தான் பாழாக்கி விட்டாய்! அவள் உயிரோடிருப்பது கூட உனக்குப் பொறுக்கவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கத் தொடங்கினேன். நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை. நமச்சிவாயத்தின் விழிகள் பிதுங்கின. அவன் தொண்டையிலிருந்து உருத்தெரியாத பல மாதிரியான சத்தங்கள் எழுந்தன.

கடவுள் என்னைக் கொலைகாரன் ஆக்காமல் தடுத்தாட் கொண்டார்! விசித்திரமான, எதிர்பாராத முறையில் குறுக்கிட்டார்.

ண்டகடாகங்கள் வெடித்துவிட்டன என்று சொல்லும்படியான ஒரு சத்தம் எழுந்தது. வீட்டின்