பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் 63 என்று ஏசுபிரானப் பிறர் சாஷ்டாங்கமாக வணக்கம் புரிந்ததாக கம் நாட்டு மரபை ஏற்றிப் பாடுகிருன் பாவலன். மும்மூர்த்தி என்ற வழக்கு, பாரத நாட்டுக்கு உரியது. இதை ஏசுகாதரோடு சார்த்தி, மூணுபேர் உனக்கில்லையோ-சின்னப் பாலகா மும்மூர்த்தியும் நீயல்லவோ.சின்னப்பாலகா' என்று சொல்கிருன். தமிழ்நாட்டுக் குழந்தையைப் போல ஏசு வளர்கிருர். தமிழன் பாடும் ஏசு அப்படி வளர்ந்தால்தான் அவன் உள்ளமென்னும் சிங்காதனத்தில் வீற்றிருக்க முடியும். சட்டிபானே எல்லாம் வச்சுச்.சின்னப்பாலகா கூட்டாஞ் சோறு ஆக்கினையா.சின்னப்பாலகா ஏழுவய சாகலையோ-சின்னப்பால கா எழுத்தாணி பிடிக்கலையோ.சின்னப்பாலகா என்பவற்றைத் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் சிறு சோறு ஆக்குவதை யும், எழுத்தாணியால் எழுதுவதையும் கினைந்தே பாடியிருக்கிருன் இந்தக் கிறிஸ்துவ காடோடிச் கவிஞன் என்பதில் ஐயமே இல்லை உலகராச்சி யத்தைப்பற்றிச்.சின்னப்பாலகா உசத்தி ஒன்றும் பேசாமே.நி.சின்னப்பாலகா வானராச்சி யத்தைப்பற்றிச்.சின்னப்பாலகா வர்ணிச்சுநீ பேசலயோ.சின்னப்பாலகா என்று ஏசு பெருமான் பரமபிதா அரசாளும் பரலோக அரசைப் பற்றி உபதேசித்ததை கினேப்பூட்டி இப் பாட்டு கிறைவடைகிறது. 13. பல கதம்பம் இந்த காடோடிப் பாடல் தொகுதியில் கடைசிப் பகுதியில் மூன்று வெவ்வேறு பாட்டுக்கள் இருக்கின்றன. தாது வருஷத்தில் (1876) ஒரு பஞ்சம் உண்டாயிற்று. அப்போது தமிழ்காட்டு மக்கள் மிகவும் துன்புற்ருர்கள். அந்தப் பஞ்சத்தைப்பற்றி அக் காலத்தில் வேதாாயகம் பிள்ளை முதலிய பல புலவர்கள் பாடியிருக் கிருர்கள்." . - அதைப்பற்றி ஒரு பாட்டு இதில் இருக்கிறது. தாய் வேறே, பிள்ளை வேறே என்று பிரிந்த அவலத்தையும், மாடுகள் பட்டினி 1. u, 326: 24, 2, ш. 826; 83. 327: 35. 3. ш. 332:107, 108, 4. என் சரித்திரம் (டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்), ப. 569.