பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆராய்ச்சி உரை ஆண்டவர் ஆதாம் ஏவாள் என்றவர்களைப் படைத்ததும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததும், அத்தோட்டத்தில் ஒரு வர்ணப் பழமரம் வளர்ந்திருந்ததும், பாவிப் பிசாசு வந்து தின்னத் தகாத அந்தப் பழத்தைத் தின்ன வழி சொல்லிக்கொடுத்ததும், ஏவாள் அதைப் பறித்துத் தான் பாதி தின்று ஆதாமுக்கும் பாதி கொடுக் ததும், அவர்கள் அப்படித் தின்றதஞல் அவர்களுடைய சந்ததி யார்கள் பாவிகளாகப் போனதுமாகிய வரலாறு ஆதாம் ஏவாள் கும்மியில் வருகிறது. பின்பு, மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி மாதா மரியம்மாள் பெற்றெடுத்த நீதிசேசு நம்மை நேர்வழி நடத்தப் பாதி ராத்திரியிலே பிறந்தாரடி' என்று ஏசுவின் பிறப்பைச் சொல்கிறது கும்.மி. டிசம்பர் மாதம் இருபத்தைத்தாங் தேதியைத் தமிழாக்கி மார்கழி இருபத்தைந்தாங் தேதியென்று இந்தக் கிறிஸ்தவத் தமிழர்கள் பாடுகிருர்கள். ஏசு பிரான் ஞானம் பெற்று, குருசிலே பாடுபட்டு முத்திக்குச் சுத்த மாய்ப் போளுர்' என்று இந்தக் கும்மி முடிகிறது. ஏசு சரிதையைச் சொல்லும் கும்மி பின்பு வருகிறது. ஏசு பிறந்தார். பல இடங்களுக்குப் போனர். பல அற்புதங்களேச் செய்தார். இந்தக் கும்மி பத்துக் கண்ணிகளோடு முடிகிறது. பிறகு வேறு சந்தத்தில் ஏசுவையே விளித்துப் பாடும் பாட்டு ஒன்று அப்பெருமான் சரிதையை விரிவாகச் சொல்கிறது. 108 கண்ணிகள் அடங்கியது இப் பாடல். ஏசு பிறந்து குழந்தைப் பரு வத்துக்குரிய விளையாடல்களெல்லாம் விளையாடுகிரு.ர். அன்னே கன்னி மரிக்குத் துணையாக இருக்கிருர். குசை முனிக்கு அடங்கி நடக்கிருர், முப்பது வயதாக்குமேல் கப்பலேறிப் போகிருர். பல அற்புதங்களைச் செய்கிருர் பல அரிய உபதேசங்கள் செய்கிருர், கிறிஸ்துவர் பாடும் பாட்டு ஆலுைம் தமிழராக வாழ்பவர்கள் பாட்டு ஆதலினல் இந்த காட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களே ஏசுவுக்கும் சார்த்திச்சொல்லியிருக்கிருன், இதைப் பாடிய நாடோ டிப் பாவலன். - சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம் புரிவது இந்த நாட்டு மரபு. - - . ராசா நி என்றெண்ணியே.சின்னப் பாலகா சாஷ்டாங்கமும் செய்தார்களே.சின்னப் பாலகா? 1. Li. Bīg: 13. 2. L. 325:18.