இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மானிடர் மானிடரைக்—கொல்லும்
வம்பினை மானிடர்கள்
ஆனபடி முயன்றால்—பகை
அத்தனையும் விலகும்.
மானிடன் கொன்றிடுவான்—எனில்
மந்த மனிதனைத்தான்!
மானிடன் மானிடனின்—உயிர்
மாய்ப்பதும் மிக்கருமை!
நல்ல குவட்டாவில்—உன்
நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன்—அவர்
இல்லை எனக்கேட்டோம்.
சொல்லத் துடிக்குதடா—உடல்!
தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின்—வயிற்றில்
அகப்பட் டறைப் பட்டார்.
ஆகும் ஐம்பத்தாறா—யிரம்
அன்பு மனிதர்களைப்
பூகம்ப உற்பா தம்—மண்ணிற்
போட்டு வதைத்துவாம்!
சோகம் புலம்புமடா—இந்தத்
தொல்லைச் செயல்கண்டால்!
ஊகத்தில் இக்கோரம்—தோன்றி
உள்ளம் அறுக்குதடா!
மாடம் இடிந்தனவாம்!—அவை
மண்ணிற் புதைந்தனவாம்!
13