பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி 57 பிரயாணத்தை ஸ்திரம் பண்ணவில்லையென்றும் பத்து தினங் களில் போகவேண்டுமென்று சொல்லுவதாகவும் அம்புஜம் என்னிடம் சொன்னுள். ஆமாம், அதற்கு என்ன பண்ணவேண்டு மென் கிருய்?" 'என்னத்தைப் பண்ணிவிடப்போறயள் ? அவளுக்கு ஏதாவது செய்துதான் அனுப்பணும். வெறுமனே அனுப்பி ல்ை நன்ருயிராது. அவள் ரொம்ப நாளாய் ஒரு வடத்தில் செயின் வேணும்னு கேட்டுக்கொண்டு இருக்கா. இப்போ நேரே வந்திருக்கும்போதே வாங்கிக் கொடுத்தால் நன்ரு யிருக்கும். அவளிடம் முக்கால் பவுன் இருக்கிறதாம். பாக்கி நீங்க போட்டால் போதும். அப்புறம் உங்களிஷ்டம். நான் சொன்னபடியா நடக்கப்போறது?’ என்று இவ்வளவையும் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள். - சரி ; இவளுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் ' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன். s ஒரு வடத்தில் செயின் இந்த ஸ்திரீகளுக்கே வாய் கூசாதுபோல் இருக்கிறது இப்பொழுது சவரன் விற்கும் விலையில் கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்குக் குறையாமல் ஆகுமே? ஆளுல் நான் அதை வாங்கிக் கொடுக்கா விட் டாலும் அவ்ளே வாங்கிக் கொடுத்து, அந்தப் பெண்ணை அனுப்பிவிடப் போகிருள், இதற்கு என்ன செய்வது ?" என்று யோசித்தேன். பேசாமல் தங்க கில்ட் கொடுத்த ரோல்ட்கோல்ட் செயினை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விட வேண்டியது தான் ' என்று தீர்மானித்தேன். முக்கால் பவுனே நாம் வாங்கிக் கொள்வது சரியில்லை' என்று மனைவி யிடம் கூறிவிட்டு நடந்தேன். - நகைக் கடையை அடைந்தேன். அங்கே ஒரு வியாபாரி ஒரு ரோல்ட் கோல்ட் செயின எடுத்துக் காண்பித்து, விலை ரூ. 3 20 ஆகும் ' என்ருன். எனக்கு உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கியது. ரூ. 320விற்கு ஒரு செயின் கிடைப்பதென்ருல் யாருக்குத்தான் இராது ? அதுவும் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில், கடைக்காரரிடம் நான் சாயந்திரம்