வல்லிக்கன்னன்
芝
இவ்விரண்டு விஷயங்கள் குறித்தும் தெளிவான சிந்தனைகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுக்கள்.
அன்பு
έλξ. 33,
சொ. கந்தரம் பிள்ளை
ராஜவல்லிபுரம்
அன்பு சகோதரர் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நலம்.
காலம் வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 12ல் எனக்கு எழுபதாவது வயது ஆரம்பமாகியுள்ளது. 59 வருடங்கள் ஒடிப்போய்
, s - ళ....భ.
எவ்வளவோ செய்ய ஆசைப்பட்டேன். இந்தியா நெடுகிலும் இல்லாது போனாலும், தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்து விட வேண்டும் என்று விரும்பினேன். தாமிரவர்ணி பிறக்கிற இடத்தையும், அந் நதி கடலோடு கலக்கிற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். கூடிய வரை எத்தனை மலைகள் மீது ஏறிப்பார்க்க இயலுமோ, அத்தனை மலைகளிலும் ஏற வேண்டும் என்று ஆசைகள் வளர்த்தேன்.
செய்தது கொஞ்சம் தான். தமிழ்நாட்டில் கூட இன்னும் பார்க்க ஆண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. ஒருசில மலைகள் மீது ஏறிநின்று
இயற்கை வனப்பை கண்டு களித்தேன். தாமிரவர்னியின் முதலையும்
- ,
முடிவையும் பார்க்க வசதிப்படவில்லை.
இன்னும் எஞ்சியிருக்கிற காலம் மிகவும் கொஞ்சம் தான். அதில் என்னத்தை செய்துவிட முடியும்? புரிந்து கொள்ள முடியாத கோ ஒரு சக்தியின் இயக்குதலினாலும், காலத்தின் துணைக: ான் அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கையை வாழ முடிந்திருக்கிறது. அவற்றின் துணையுடன், உடலில் தெம்பும் உள்ளத்தில் உறுதியும் இருக்கிற வரை, என்னால் இயன்றதைச் செய்வேன். அவ்வளவு தான்: .
அன்பு
భీi. శ్రీ,