பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 93. உன் பகைவர் என்பகைவர்! உண்மை! முழு உண்மை! உயிர்போகும் நேரத்தும் இதை மறக்க மாட்டேன்! உன் அன்பர் என் அன்பர்! உண்மை! முழு உண்மை! உற்றபொருள் இலையெனினும் உடலுதவி செய்வேன்! எந்நாளும் உனை வெற்றி கண்டவகை இல்லை! இடைபுகுந்த வடமொழியும் பிறமொழியும் கூறும்! தென்னவளே! தீந்தமிழே! என்னுயிரே! உன்றன் - சீர்பாடல் என்வேலை! பிறிது விரும் பேனே! 4 25—11—64