இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு I 39
‘"துன்னெறி ஒழுகியோர் துயர் ஆவரோ? நன்னெறிப் படினும்பின் நன்கு மூழ்கினும் பொன்னிறம் வாயசம் புணரு மோகொலாம்?’
(பா. எ. 150) ‘வன்தொ டர்ப்படு மான்விடு பட்டெனச் சென்று கூடினன் முன்விடு செந்நெறி’
(шт. ст. 1 63) ‘"துணியெலாம் ஒருங்குகூடி மலையெனத் தொடரு
- (மேனும் பணியெனப் படுமால் தூய பார்த்திவன் அருளுண்டாயின்’ (பா. எ. 258) ‘பாதக குழுமிச் சொற்ற பழிப்புரை s என்னும் கொள்ளி’.
(பா.. எ . 3,15)
புற்றரவின் சீறிப் புடையவளைந்து புல்லியர் தாம் துற்றி விளைத்த கொடுங் துன்பம் தனியுழந்து முற்றும் கிரகணத்தின் மூழ்கு தினகரன் போல செற்றமிலாத் தேவமைந்தன் தேசிழந்துதேம்பினார்’
(பா. எ. 324) இத்தகைய சிறந்த உவமைகளைச் சிறப்புறக் கையாண் டுள்ள ஆசிரியர், ஒரே உவமையை இரு இடங்களில் கூறி யிருப்பதும் கருதத்தக்கது. ஆன்மீகன் தனியனாய் நாச தேசத்து மக்களுக்கும், ஆன்மீகன் நிதானியுடன் சேர்ந்து மாயாபுரி மக்களுக்கும் கூறிய அறிவுரைகள், பயனற்றுப் போயினமைக்குக் கல்லின் மேல் இட்ட பந்து மீள்வதை உவமையாகியுள்ளார் ஆசிரியர்.
‘இந்தவாறு உரைத்த இருஞ்சிலை மீது தாக்கும் பங்தெனல் ஆயது.’ -
(шт. ст. 14) ‘விலையுறு மாயசிற் றின்பம் வேட்டுஉழல் புலையுறு மாந்தருள் பொருந்திற் றில்லையால்