பக்கம்:இலக்கியக் கேணி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தத்தா நமரே காண்

13

என் போர்க்குச் செப்புப் படிமங்கள் செய்து எழுந்தருளி வித்தார் என்று தஞ்சைப் பெரிய கோயிலிற் காணும் கல்வெட்டுக்களினின்றறியலாம். மெய்ப்பொருள் நாயனாரின் படிமத்தை எழுந்தருளுவித்த செய்தியைக் கூறும் கல்லெழுத்து, நாயனாரை "தத்தா நமரே காண் என்ற மிலாடுடையார்" என்று குறிக்கிறது. இதனால் "தத்தா நமர்" என்று மெய்ப்பொருள் நாயனார் கூறியது அக்காலத்துச் சிவ பக்தர்களின் உள்ளத்தில் கல்லெழுத்துப் போல் பதிந்திருந்தது என்றும், அதனாலேயே மெய்ப் பொருள் நாயனாரைக் குறிக்க வந்த பொய்கை நாடு கிழவன் " தத்தா நமர் என்ற மிலாடுடையார்" என்று கல்லெழுத்திற் குறித்தார் என்றும் அறிகிறோம்.

கல்லெழுத்துப் பின்வருமாறு

ஸ்வஸ்தியூரீ கோப்பரகேசரிவர்மரான பூரீ ராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு மூன்றாவது உடையார் பூரீ ராச ராசேசுவரம் உடையார்க்கு நீகார்யஞ் செய்கின்ற பொய்கைநாடுகிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் முவேந்தவேளான் யாண்டு மூன்றாவதுவரை செய்வித்த செப்பு பிரதிமங்கள் உடையார் கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்நங்கள் தகூஷிணமேருவிடங்கனென்னும் கல்லால் நிறை எடுத்தும் கல்லில் வெட்டின பாதாதிகே சாந்தம் இருபதிற்று விரல் உசரத்து இரண்டுகையுடையாராகக் கனமாகச்செய்த "தத்தா நமரேகாண் என்ற மிலாடுடையார்" ஒருவர். இவர் நின்ற பதிற்று விரல் நீளத்து எண்விரல் அகலத்து எண்விரல் உசரத்து பத்மத் தொடுங்கூடச்செய்தபீடம் ஒன்று. இவனே இவர்க்குக் குடுத்தன. உருத்திராக்ஷம் ஒன்றிற் கட்டின பொன்