பக்கம்:இலக்கியக் கேணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னார் மேனியன்

35


ஒருவர் பெயர் ஆனைமங்கலமுடையார் பஞ்சநதி வயிரத்தூண் என்பதாம். இப்பெயர் "மழபாடி வயிரத்துாண்” என்ற திருநாவுக்கரசர் வாக்கை நமக்கு நினைவூட்டும்.

பொன்னார் மேனி விளாகம்

திருபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருஆரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டு வீராபி வேகமும் விஜயாபிஷேகமும் பண்ணியருளின பூரீ திரி புவன விரதேவரது முப்பத்து நான்காம் ஆண்டுக் கல் வே' டொன்றில்ை பொன்னர் மேனி விளாகம்’ ான்று ஊரின் உட்பகுதியும் பெயரிடப் பெற்றதாக அறிகிருேம். திருமழபாடியுடையார் திருக்கோயிலில் பரீ மாகேசுவரர்கள் சிலர் இருந்தனர். அவர்களுள் rயில் பாக்கிழான் விக்க விநாயகன் எம்பிரான் சம்பந்தன் ' என்ற பெயருடையவர் ஒருவர் இருந்தார். இவர் இத்திருக்கோவில் திருநாமத்துக்காணி ஆகிய கலேயமங்கலத்தில் 128 குழி நிலத்தில் அழகிய பெரு மாள் ' என்னும் திருநாமத்தால் திருநந்தவனம் செய்தார் . இத் திருநந்தவனம் செய்கையில் இத்திரு வந்தவனம் செய்யும் திருத்தொண்டர்களுக்குத் திருவமு துக்கும் வேட்டிக்கும் உதவுவதற்குப் பல பகுதிகளில் உள்ள நிலத்தை விலக்குக் கொண்டு அளித்தனன். இங்கிலத்துள் அரைமா பரப்புள்ள நிலப்பகுதி பொன்ஞர் மேனி விளாகத்தில் இருந்தது எனப் பின்வரும் கல் லெழுத்துப் பகுதி விளக்கும் :

7 குலோத்துங்கன் III (1178-12.18) 8 S. I. I. Vol V No. 632. 9 திருநாமத்துக்காணி-சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம்.