பக்கம்:எழில் விருத்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

எழில் விருத்தம

1. மணிக்கூண்டு

"சீருடன் நிமிர்ந்த செங்கல்
திருமணி மாடத்(து) உச்சித்
தாரணி தமிழர் நாட்டுத் -
தனிமதில் இடையில் மின்னி
 ஊரினைக் காக்கும் வீரன்
ஒப்பவே ஓசை காட்டும்
நேரிய செயலைக் கண்டேன்;
நிமிர்மணிக் கூண்டே! வாழி!".......................................1

"காலையில் கிழக்கில் தோன்றிக்
கடும்பகல் உச்சி மேவி
மாலையில் மேற்கில் சாய்ந்து
வைகலை வெய்யோன் காட்டும்
 மாலையின் அளவே யன்றி,
மணிக்கூண்டே! உன்னைப் போலக்
காலத்தை ஒவ்வோர் நாளும் .
இராப்பகல் காட்டப் போமோ?"................................2