எழில் விருத்தம்
39
மாடு கன்றொடு வயல்வெளி பூம்புனல்
மலர்மிகு நீள்குன்றம்
ஊடு செஞ்சுடர் பொன்னிற மழைபொழி
ஒளிகுறை கீழ்வானக்
காடு மேவிடும் கதிரவன் கண்டனம் !
கவின்மிகு கதிர்அந்தி
ஓடு போழ்தினில் கீழ்த்திசை விளக்குகள்
ஒத்தன விண்மீன்கள் !............................................. 6
பந்தி பந்தியாய் நாரைகள் இணையுடன்
படுகையைப் போய்ச்சேர
அந்தி பூத்திடப் பூத்திடும் வேலியில்
அழகொளி பொன்பீர்க்கு!
சிந்து பூத்திடச் செவ்வொளி பூத்திடச்
சிரித்தது செவ்வானம் !
வெந்து பூத்திடும் வானிடை முல்லைபோல்
விரிந்தன விண்மீன்கள் !.......................................... 7
காயும் போழ்திலும் கடந்திடு போழ்திலும்
கதிரொளி நனlநல்கும்
பாயும் செவ்வொளி மறைந்திட மறைந்திடு
பகலவன் வழிநோக்கித்
தேயும் திங்களும் வழியினைக் கூட்டியே
திரும்புவோர் செயல்போலச்
சாயும் செங்கதிர் போய்விழ நன்றியாம்
தண்ணொளி முகம்காட்டும்!................................... 8