பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் - பாரதியும்

பாரதியார் என்றால் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியாரைத்தான் குறிக்கும். பாரதி என்றால் நமக்கு அவருடைய நினைவு தான் வருகிறது. அல்லது "பாரதியார்" என்று கேட்டாலும் விடை தெரியுமாறு ஆராய்வோம்.

பசி ஏற்பட்ட போது உணவு கிடைத்தது என்று சொல்லும்படியாக தமிழ் நாட்டில் தமிழ் நிலை குன்றியிருக்குங்கால் அறிஞர்கள் எதிர்பார்த்தபடி பாரதியார் தமிழர்களிடையே தோன்றினார். தமிழின் ஆதிகால இடைக்கால நிலைகள் வெவ்வேறாயிருந்தன. கடைக்கால நிலையும் மாறுபட்டேயிருந்தது. ஆனால் கடைக்காலத்தில் தமிழுலகம் பாரதி தேவை தேவை என்று கதறிற்று.

விடை யுகைத்தவன் பாணினிக்
கிலக்கண மேனாள்
வடமொழிக் கிரைத்தாங்கியன்
மலயமா முனிக்குத்
திடிமுறுத்தியம் மொழிக்கெதிராக்கிய
தென் சொல்

மடமகட் கரங்கென்பது வழுதி நாடன்றோ

கவிஞர் பேசுகிறார்