322 சூடும்ப விளக்கு
எதுஎனக் இன்பம் நல்கும்?
“இருக்கின்றாள்” என்ப தொன்றே!
நினைக்கின்றாள்.
நினைக்கிறேன் நான்!
இனிக்கின்ற தமிழை அன்னாள்.
இசைக்கின்ற ஆற்றல் இல்லை.
தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்
தனித்துள்ளாள் மறுபு றத்தே!
எனைக்கண்டும், என்னைத் தொட்டும்.
பயில்கிலாள்; எனினும் என்னை
'நினைக்கன்றாள், நினைக்கின் றேன்நான்;
நிலைக்கின்ற தென்பால் இன்பம்!
அன்புள்ளம் காணுகின்றேன்'
அகத்தின்பம் காணுகின்றேன்
என்பும்நற் றோலும் வற்ற,
ஊன்றுகோல் இழுக்க வீழத்,
தன்புது மேனி, காலத்:
தாக்னால் குலைய லானான்.
என்முது விழிகா ணற்கும்
இயலாதே! எனினும் அன்னாள்
அன்புள்ளம் காணு இன்றேன்।
அகத்தின்பம் காணு இன்றேன்!.
பேரர் அம்மாயி என்றழைப்பர்
அது கேட்பேன் இன்பம் செய்யும்
செம்மா துளைபி எந்து:
இதறிடூம் சிரிப்பால் என்னை
அம்மாது களிக்கச் செய்வாள்!
அதுவெலாம் அந்நாள்! இந்நாள்
அம்மணி நகைப்பும் கேளேன்.
ஆயினும் பேரர் ஓர்கால்
“அம்மாயி” என்பார்! கேட்பேன்
அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்!
பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை