திருமுருகாற்றுப்படை 83
அழிக்கவல்ல போற்றலேயும், மாறுபட்டாரை அழித் தொழிக்கவல்ல வலிய பெரிய கைகளையும் உடைய, மறுவில், கற்பினேயும் ஒளிவீசும் துதலினேயும் உடைய தெய்வயானை யின் கணவனும், செங்கடம்புமலர்களால் கட்டப்பெற்ற தேர்உருள்போலும் மாலைகிடந்தசையும் மார்பினேயும், காந்தள்மலர்களால் ஆய கண்ணியினையும், கடல் கலங்கச் சென்று சூானேக் கொன்ற-வேலால் மாமரத்தை வெட்டி வீழ்த்திப்பெற்ற-மறனிழுக்கா மானத்தினேயும், அளக்க லாகாப் பெரும்புகழினையும் உடைய செவ்வேளும் ஆகிய முருகனுடைய திருவடிகளைச் சென்று அடையும் இருவருளேப் பெறும் விருப்பத்தினே உடைய பேருள்ளங் கொண்டு, அத் திருவடிகளேச் சென்றடையும் செலவினே விரும்புவையாயின், கின் நன்னர் கெஞ்சத்து அவ் இன்னசையினை நீ இன்னே பெறுகுவை. . . .
அதை அடைதற் பொருட்டு அவனேக்கான விரும்பும் ,ே அவன் யாண்டாண்டு உறைவன் ' என வினவுதி யாயின், அவலுறையும் இடங்களைக் கூறுகின்றேன் கேள்; அவன் திருப்பரங்குன்றத்திலே உளம் விரும்பி இருப்பான்; நாமனூர் அலேவாய் என அழைக்கப்பெறும் திருச்செந் தாரில் சென்று வாழ்தலும் அவனுடைய இயல்பு; பொதினி எனவும், பழனி எனவும், சித்தன்வாழ்வு எனவும் வழங் கப்பெறும் திருவாவினன்குடியில் சின்னுள் வாழ்தலும்" உரியன்; மலேகாட்டு ஊர்களில் ஒன்முகிய திருவேரகத்தில் பெரிதும் உவந்து உறைதலும் உரியன்; கூறிய இவ்விடங் - களிலே அல்லாமல் தமிழகத்தின் குன்றுகள்தோறும் ஆடிமகிழ்தலும் அவன் வழக்கமாம் ; தோழிக் கொடியிஆ கிட்டு, ம்றியறுத்து நறுமலரும் சிறுதினையும் பரப்பி ஊர். தோறும் எடுத்தி விழாக்களத்தின்கண்ணும், அன்புட்ை யார் எத்திப்பாவும் தன்மனம் விரும்பும் இடங்களிலும், வேலன் வெறிபாடு களத்திலும், பெருங்காட்டிலும், இள மாக்காவிலும், ஆம்களிலும், குளங்களிலும், ஆற்றிடைக் குறைகளிலும் இது போன்ற பல்வேறு இடங்களிலும், முச்சந்தி, காற்சந்திகளிலும், புதுப்பூ மலர்ந்த கடம்படி