பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக, மோசி கீரனுர்

பண்டைத் தமிழகத்தில் கீரனர் என்ற இயற்பெய ஒருடையார் பலராவர் ; இவர் மோசிநகரிற் பிறந்தவராதலின், மோசிகீரனுர் என அழைக்கப் பெற்றுளார். தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, கொண்கானங்கிழான், கன் னன், ஆய், அரலேக்குன்று கிழவோன் ஆகியோரைப் பாராட்டியுள்ளார். . -

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அரிசில் கிழாராலும் பாராட்டப்பெறும் பெரும்பேறுடையான் என்பதறிந்த புலவர் மோசிகிசனர் அவன் அரசவை கோக்கிச் சென்றார். அவர் சென்றபோது அரசன் ஆண்டு இலன்; அவனைக் காணுத புலவர் அவ்வரண்மனையினச் சுற்றிவருங்கால் ஆண்டு ஒருபால், அழகிய கட்டில் ஒன்று இருக்கக்கண்டார்; அது, அரசனின் வெற்றி முரசிற்கு உரிய கட்டிலாம் ; முரசு ரோடிவருதற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமையால், அக்கட்டில் வறிதே கிடந்தது; அவ்வழகிய கட்டிலேயும்; அதன் மீது விரிக்கப் பெற்றிருக் கும். மெல்லிய மலர்களால் ஆகிய படுக்கையினையும் கண் டார் புலவர் அவர்க்கு, அது முரசுகட்டில் என்பது தெரியாது; மேலும், வழிநடை வருத்தமும் உடையாாவர்; அதல்ை அதன்மீது கிடந்து நன்கு உறங்கிவிட்டார்; சிறிது கழித்து ஆண்டுவந்த அரசன், தன் முரசுகட்டில் மீது ஒருவர் படுத்துறங்கக் கண்டான்; முரசு, அரசனின் வேறன்று முச்சிற்குச் செய்யும் சிறப்பு, அரசர்க்குச் செய்யும் சிறப்பு; அதற்கு உண்டாம் பழி, அரசற்கு உண் டாம் பழி என்பது பழங்காலப் பண்பு; ஆதலின் முரசு கட்டிலில் படுத்து உறங்குவது, அரசு கட்டிலில் படுத் அறங்குவதுபோலும் பெருங் குற்றமாம்; அக் குற்றம் புரிந்தார்க்குக் கொலேயே தண்டமாம். ஆயினும், தன் .முரசுகட்டிலில் படுத்து உறங்குவார் பெரும்புலவராவர் என்பதை அரசன் அறிவான்; புலவர் நாடாளும் தன்னி னும் உயர்ந்தவராவர் என்பதை உணர்வான் அவன்;