பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


கும், மாடமாளிகையிலே கூத்தாடும் களிப்புக்கும் குடிசையிலே கொட்டும் வாட்டத்துக்கும்--எதற்கும் நாடகமேடை (கதை, காட்கி மூலம்) எடுத்துரைத்த காரணம் என்ன விதி: யாரை விட்டதுகாண் விதிவசம், எவரை விட்டது காண்: பாடுவார் நடிகர் ராமச்சந்திரர். மர உரிமைத்தரித்து வேடத்தில் சீதாபிராட்டியரிடம். எதிரே இருந்து காட்சியைப் பார்ப்பவன், மில்லிலே மார்புடையப் பாடுபட்டுவிட்டு, மாகாளி கோயில் குங்குமத்தை நெற்றியிலே அப்பிக்கொண்டுள்ள அரைவயிற்றுக்கு ஆலாய்ப் பதிக்கும் ஆலைத் தொழிலாளி.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தும், கையே தலையணையாய், கட்டந்தரையே படுக்கையாய், காய்ந்த வயிரே தோழனாய்க் கொண்டு கஷ்டப்படும் பாட்டாளி முன்பு, விறகுவெட்டி வேதனைப்பட்ட சத்தியவான், ராஜ்யமிழந்து சுடலைகாத்த அரிச்சந்திரன், பெற்ற குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள் இவர்களைக் காட்டி, எத்தகைய அறிவை வளர்க்க முடியும்! விதி--விதி என்று அவனை விம்ம வைக்கத்தானே முடியும். இந்தத் தேன் கடிக்குப் பிறகு, ஒரு தேன் சொட்டு அவனுக்கு--அதாவது மேல் உலகக் காட்சி--அங்கு கற்பக விருட்சம், காமதேனு! இந்த 'அறிவு' அல்ல இன்று தேவைப்படுவது! அது போலவே, வெற்றி வீரனான மன்னன், குலகுருமுன் மண்டியிடும் காட்சி, நடத்திக் காட்டப்படும்: என்ன அதன் பொருள்?

பதினைந் தாண்டுகளுக்கு முன்பு, நாடக மேடை ராஜ தர்பாரே ஜாதி முறை போதனை விளக்கமாகத்தான் இருக்கும்!

ஆலயங்களிலே அந்தணர்கள் பூஜைகளைச் செய்து
வருகிறார்களா?

ஆமாம், அரசே! ஆறுகால பூசையும் நடந்து
வருகிறது!

வைசியர்கள் செல்வ விருத்திக்கான காரியத்திலே
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களா?