பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


பயனில்லை. அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் திருத்துவோம் என்றாலும் பயனில்லை நாலாந்தர நாடகக் கம்பெனி கதிதான். புகழ் பூஜ்யம்; வருவாயும் கிடைக்காது. திரையைத் தீட்டியவர், வர்ணஜால வரப்பிரசாதர் ஆயிற்றே அப்படிப்பட்டவர் தீட்டியதை அழித்தெழுதும் யோக்கியதை அடியேனுக்கு உண்டா, என்று உபகாரம் பேசிப் பயனில்லை அழித்தெழுதத்தான் வேண்டும். வாலிபர்களின் திறமையால் புதிய சித்திரம் தீட்டப்படவேண்டும். அதற்குத் தேவைகள் சில பல உண்டல்லவா? வித விதமான வர்ணங்கள்; அவைகளைக் கொட்டிக் கலக்கி ஊற்றிவைக்க வட்டில்கள், தீட்டுக்கோள். இவைகலையெல்லாம் விட முக்கியமாகத் தீட்டும் திறம்பெற வழி வகைகள் இவ்வளவும் வேண்டுமல்லவா? சுதந்திர இந்தியாவில் வாலிபர் செய்யவேண்டிய வேலைக்கு இத்தகைய தேவைகள். உள்ளன. போரிட்ட காலம் நாடி முறுக்கேற்றய நேரம் நல்வாக்குக் கொடுத்த வேளை--இவை தீர்ந்துவிட்டன. சுதந்திர இந்தியாவிலே, வளைவுகளை நிமிர்த்த, படுகுழிகளை மூட, பாதைகளைச் செப்பனிட, சூது மதியினரை அடக்க. சொந்த மதியற்றோருக்கு அறிவு புகட்ட, சுரண்டுபவனை அடக்க, சோர்ந்திருப்பவனுக்கு உரம் ஊட்ட, பஞ்சம் வராமல் தடுக்க, படிப்பைப் பரப்ப தொழிலை வளர்க்க, வாலிபத்தை வளமாக்க--எண்ணப்போனால் மள மளவென்று பலப் பல வேலைகள் தெரியும் மனக் கண்முன் இவைகளைச் செய்யவேண்டும். அதற்கான உறுதிவேண்டும் செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும். இதற்கு முழக்கங்கள்--பவனிகள் கடை அடைப்புக்கள் போதா. முறையும் திறமும், வழியும் வகையும் வேறு; நிச்சயமாக வேறுதான் வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்டவேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும். உடல் உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். காலிபர்கள் பாலம் அமைக்க, நீர்த்தேக்கம் அமைக்க உழவு முறையே மாற்றப் பணி புரியவேண்டும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்துப், புதுமையின் சோபிதத்தைக் காட்டிப் புத்துலகு அமைக்கவேண்டும்