பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


அவனுடைய நிலை கோடீஸ்வரன்
என்று கூறும்படி இருக்கிறது.

என்று பேச்சு. கொஞ்சம் முடுக்காகிவிட்டது,

கந்தன் கேட்டானாம் கால் ரூபாயாவது
அதிகம் தேவை; கூலியைக் கொஞ்சம்
உயர்த்துங்கள் என்று முடியாது என்று
சொல்லிவிட்டாராம்.

முத்தன், பேசச் சென்றானாம், முகத்தைக் கடுப்பாக வைத்துக்கொண்டு, துவும் முடியாது போ, என்று சொன்னாராம்.

முனியன்; உள்ளே நுழைந்தபோது, நாயை, அவன் மீது ஏவினார்களாம். என்று உரையாடல் வளர்ந்து, கடைசியில், கந்தனும் முனியனும் முத்தனும், காத்தானும், இப்படி நாம் தனித்தனியே, நமது குறைகளை எடுத்துக் கூறிப் பரிகாரம் தேடிப் பயனில்லை. தனித்தனியே போய்ப் பேசியும் பயனில்லை. நாமெல்லாரும், பொதுவாக, நமக்குள்ள குறைகளைக்கூறி, மொத்தத்திலே பரிகாரம் தேடவேண்டும். அதுதான் சரியான வழி என்று முடிவு செய்தனர். ஸ்தாபனங்கள் தோன்றின.

இந்த முடிவுக்குத் தொழிலாளர்கள் வந்துசேர, ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் பிடித்தது.

ஆகவே, குறைகளை உணர்ந்து, அவைகளுக்குக் காரணம் யாவை என்பது பற்றிய விவாதத்திலே ஈடுபட்டு, உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக்கொள்ள, தனித் தனியாக முயற்சித்துப் பார்த்து, முடியாது போன பிறகு, தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபன ரீதியாகத் தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.