தமிழ்ப் பழமொழிகள்
117
நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா?
நன்மை செய்யக் கன்மம் விடையாது.
நன்மை செய்யக் கனம். 13810
நன்மை செய்வார் நலம் பெறுவர்; தீமை செய்தால் தீமை பெற்று நலிவர்.
நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
நன்றாய் இருக்கிறது நாயகரே, பல்லை இளித்துக் கொண்டு ஆடுகிறது.
நன்றாய் இருந்தாலும், நல்லி சுட்ட பணியாரம். 13815
நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள்.
நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்கமாட்டார்கள்.
- (நலம் கெட்டாலும்.)
நன்றாய் முடிவது எல்லாம் நன்றே.
நன்றிக்கு நாய்; கர்வத்துக்குக் களிறு.
நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா? 13820
நன்றி கெட்டவன் நாயினும் கடையன்.
நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல.
நன்றி செய்தவனை நாயின் கழுத்தில் கட்டு.
நன்றி மறந்தாரைத் தெய்வம் நின்று கொல்லும்.
நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம். 13825
நன்றி மறவேல்.
நன்று செய் மருங்கில் தீது இல்.
- (அகநானூறு.)
நன்னிலம் கரந்தை; நடு நிலம் கொளிஞ்சி.
நனவிலும் இல்லது கனவிலும் இல்லை.
- (குறள், 1217 பரிமேலழகர் உரை.)
நனைத்துச் சுமக்கிறதா? 13830
நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம்.
- (கிழவி.)
நனைந்த கோழி மயிர் போலே.
நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை.
நஷ்டத்துக்கு ஒருவன், நயத்துக்கு ஒருவன்.
நஷ்டத்துக்குப் பலர்; நயத்துக்கு ஒருவனோ? 13835
நக்ஷத்திரத்தை எண்ண முடியாது; நாய்வாலை நிமிர்த்த முடியாது.