118
தமிழ்ப் பழமொழிகள்
நா அசைய நாடு அசையும்.
- (நா அசைந்தால்.)
நா உள்ளவன் கழு ஏற மாட்டான்.
நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா? 13840
நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும்.
நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க வேணும்.
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான்.
நாக்கில் புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம்.
நாக்கிலே வெல்லம், நாவிலே விஷம். 13845
நாக்கிற்கு நரம்பு இல்லை.
- (எலும்பு இல்லை.)
நாக்கு ஒன்றா இரண்டா?
நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும்.
- (நரம்பு இல்லை.)
நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது. 13850
நாக்கும் சீக்கும் பொல்லா.
நாக்கை அடக்கிப் பேசு.
நாக்கைத் தொங்கவிட்டுத் தலை ஆட்டும் நாய் போல.
நாக்கை நறுக்கி நாய்க்குப் போடவேண்டும்.
நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள். 13855
நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது.
நாகசுரம் என்றால் தெரியாதா? மத்தம் போலக் கலகல என்னும்.
நாகசுரம் பொய், நாசனம் பொய், நாயினம் ஆயினேனே!
நாகப்பட்டினம்.
- (-பைத்தியம்.)