உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந்தடிக்கும் தென்றல், அறிவுக் களஞ்சியம்! மாற்றாருக்கு, மந்த புத்தி கொண்டவருக்கு, அவர், கொட்டும் செந்தேள், சுழன்றடிக்கும் சூறாவளி, தனல் கக்கும் எரிமலை, சீறிப் பாயும் சிறுத்தை!

தமிழ்ப் பாசறையின் முதல் வெளியீடாக அறிஞர் அண்ணாவின் நூலேயே வெளியிட எண்ணினோம், அணுகினோம், அன்போடு தந்துதவினார். அண்ணாவிற்கு நன்றியும் வணக்கமும்!

"தேவலீலைகள்" அறிஞர் தீட்டிய தலைசிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும். இதிலுள்ள கட்டுரைகள் திராலிட நாடு இதழில் தனித்தனியே வெளிவந்தவை யாகும்.

தமிழ்ப் பாசறை, பூரிப்போடும் பெருமிதத்தோடும் தேவலீலைகளை உங்களுக்குத் தருகிறது, இனி இது போன்ற மிகச் சிறந்த நூல்களையே உங்களூக்குத் தரும் என்பது உறுதி! தோழர் இராதாமணாளன் தீட்டிய, எண்ணக் குவியலும் எழில் மிகுசித்திரமுமான "பொற்சிலை" பாசறையின் அடுத்த வெளியீடு! திராவிடப் பெருங்குடி மக்களின் ஆதரவு தேவை.

—தமிழ்ப் பாசறையார்.