உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவலீலைகள்!

"தேவாதி தேவா! தேவர். தலைவா! மூவரே, மூவரில் முதல்வனே!" என்று பக்திமான்கள் நித்த நித்தம் சத்தமிட்டுப் பூஜிக்கக் கேட்கிறோம். சித்தம் சிதைந்தவனை வித்தகனே என்று அழைப்பதுபோலக் குடியனைக் குணவானே என்று கொண்டாடுவது போல, குக்கலைக் கேசரி என்று அழைத்தல்போல இருக்கிறது.... காமவெறியர்களை தேவா என்றும் மூவா என்றும் அழைக்கும் போக்கு. ஏனெனில் எந்தப் பக்தியினால் யாராரை, இங்ஙனம் ஆரிய மதத்தைக் கடைப்பிடிக்கும் குறைதியினர் பூஜிக்கின்றனரோ, அந்த மூர்த்திகளின் லீலைகள். கேவலம் காமாந்தகாரம், கபடம், கயமைக்குணம், காட்டுயிராண்டித் தனம் நிரம்பியதாக இருப்பதை, அதே பக்திமான்கள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளிலிருந்து காணலாம். தேவவீலைகள் என்ற தலைப்பிலே இந்தக் காமக்கூத்தர்களின் கோலாகலத்தை ஓரளவு தருகிறேன். கருத்துள்ளோர் சிந்திக்கட்டும்; பழமைவிரும்பிகள் வெட்கித் தலைகுனியட்டும்; வாலிப உலகு - கைகொட்டி நகைக்கட்டும்!

000

"இந்திர தேவா! இதுவே தக்க சமயம் தாமதிக்க வேண்டாம். உடனே புறப்படுக!"