உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தேவலீலைகள்

"தூதா! என்ன சேதி! எங்கே புறப்படச் சொல்கிறாய்?"

“தங்களுடைய நெடுநாளைய எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள அபூர்வமான சமயம் வாய்த்துவிட்டது, கிளம்புங்கள்"

"எங்கே?"

"பாரிஷதன் மாளிகைக்கு"

"ஆஹா! அந்தப் பேச்சை, ஏனடா தூதா எடுத்தாய்? அங்கு அந்த ரூபாவதி வபுஷ்டமை என்னை வாட்டியபடி இருப்பாளே! நான் கெஞ்சியும் கொஞ்ச மறுத்தாளே! என் மனம் பாகாய் உருகியும் அந்தப் பாவை இந்தப் பாவிக்கு இணங்கவில்லையே. என் செய்வேன்? எவ்வாறு உய்வேன்? என்னென்னவெல்லாமோ செய்து பார்த்தேன்; என் முழுத் திறமையையும் காட்டினேன், முடியவில்லையே. வபுஷ்டமை மீது கொண்ட மோகமோ தணியவில்லை. அவளோ இணங்கவில்லையே, ஏங்குதே என் மனம்"

"என்ன இது இப்படிச் சோதிக்கலாமோ! அகலிகையின் ........."

"அது சுலபமாக முடிந்துவிட்டது. சுலபமாக முடிந்தது மட்டுமல்லடா தூதா? அவளுக்கு, நான் இந்திரன் என்று தெரிந்ததும், ஆனந்தமும் பிறந்தது. பெரிய இடமாயிற்றே என்ற பெருமையுமடைந்தாள்; இந்த வபுஷ்டமை அப்படியில்லையே!"