பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாத்துரை

13



பச்சைப் புற்றரைக்கே பஞ்சமான நாட்டிலிருந்து வந்தவர்களின் மனதிலே, தமிழகத்திலுள்ள மாந்தோப்புகளும் மண்டபங்களும், சாலைகளும் சோலைகளும், குன்றுகளும் கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களைத் தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து அவர்கள் கேட்டிருப்பார்கள், 'மெல்லிய ஆடை அணிந்திருக்கிறீர்களே, அது எது' என்று. தமிழர்கள் 'அது எங்கள் கைத்திறமை; இந்திரன் தந்த வரப்பிரசாதமல்ல' என்று 'கூறியிருப்பார்கள். 'இமயம் வரை சென்று உங்களது இலச்சினையைப் பொறித்திருக்கிறீர்களே, அது எப்படி, என்று கேட்டிருப்பார்கள். அதற்குத் தமிழர்கள் 'அது கருடாழ்வார் கடாட்சத்தாலல்ல, எங்கள் தோள் வலிமையினால்'. என்று கூறியிருப்பார்கள். இன்னும், 'உங்களது இசை இன்பமாயிருக்கிறதே, அது எப்படி' என்று ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்துக்கேட்டிருப்பார்கள். அதற்குத் தமிழர்கள் 'நாரதர் தந்தியில் மீட்டிடும் தேவகானமல்ல; நாங்கள் கண்டுபிடித்த யாழின் தன்மையது' என்று கூறியிருப்பார்கள். மீண்டும் 'அந்த யாழ் ஏது’ என்று கேட்டிருப்பார்கள். 'அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்ததல்ல; எங்கள் இசையறிவில் கடைந்தெடுத்தது' என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப் பார்த்து 'அது என்ன?' என்றிருப்பார்கள். 'அது தேவலோகத்துச் சரக்கல்ல; எமது தீரர்கள் கடல்முழுகிக் கண்டெடுத்த முத்து' என்றிருப்பார்கள் தமிழர்கள். அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும். இது