பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

நிலையும் நினைப்பும்



வரலாறு கூறுகிற விஷயம். வரலாற்று ஆசிரியர்களும் அறிவார்கள், ஒரு காலத்தில் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; வந்தவர்கள் வறண்டநாட்டிலிருந்து வளமான நாடு தேடி வந்தார்கள்; வளமுள்ள நாட்டில் புதிதாக உலவிய பொழுது அச்சத்துடனேயே உலவினார்கள் என்பதை. இது வரலாற்று ஆசிரியர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிற பாடம். உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்களோ என்னவோ, இது எனக்கு என் வரலாற்று ஆசிரியர் கலா சாலையில் கற்றுக் கொடுத்த பாடம். கற்றுக்கொடுத்த பாடத்தை மறப்பது ஆசிரியருக்கு அறமாகாது. கற்றுக் கொண்ட பாடத்தை மறப்பது எனக்கு அழகுமல்ல. குரு சொல் தட்டிய குற்றத்திற்கும் உள்ளாகிறேன்! ஆகவே நான் கற்றதைக் கூறுகிறேன்.

வளமான நாடு, அதில், வளைந்து வளைந்து செல்லும் வாய்க்கால்கள், வாய்க்கால்களுக்குப் பக்கத்தில் வயல்கள், வயல்களுக்குப் பக்கத்தில் சாலைகள், சாலைகளுக்குப் பக்கத்தில் குன்றுகள், குன்றுகளைத் தொட்டுத் தடவும் மேகங்கள், மேகங்கள் தரும் மழைத்துளிகள், மழைத்துளி கண்டு மகிழ்ச்சியுறும் மக்கள்--இவைகளைப் பார்க்கும் வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் என்ன எண்ணியிருப்பார்கள், என்ன எண்ணுவார்கள், என்ன எண்ணியிருக்கமுடியும்?

சென்னை, பட்டப்பகல் 12 மணி நேரம். தார் ரோடு இளகியிருக்கிறது. ஒருவன் நடந்து செல்லுகிறான். மற்றொருவன் பக்கத்தில் போட்டா மடி-