390
நூறாசிரியம்
புலம்புகோ யானே பொன்றுகோ யானே
நெருநல் வெண்முகை இன்றவிழ்ம் ஊங்குப்
பெருங்கட் படுவந் தூம்புநிறை உண்மெனக்
கருதிப் பொறிDமிறு கயந்தலைப் படுமுன்
நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு வாங்கிக்
5
கர்ங்கோட் டேந்தி வழியிடை யூழ்க்கும்
பொலங்கிளர் தாமரைப் புதுமலர் புரைய
நலங்கெடப் புரிந்தவன் தோட்குக்
கலங்குயிர் சோரக் கலுழுமெந் நிலைக்கே!
பொழிப்பு:
யான் புலம்பி அழுவேனோ, அன்றியான் இறந்தே ஒழிவேனோ! நேற்றைய வெண்ணிறப்போது இன்று மலரும், அதனிடத்தே மிகுந்த தேன் பொருந்தியிருக்கும், துளைக்கையால் உறிஞ்சி நிரம்ப உண்ணுதும் எனக் கருதிப் புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவைச் சென்றடைதற்கு முன்னரே, நீர் பருக விரும்பி அவ்விடத்தை யடைந்த வலிமைசான்ற ஆண்யானை பறித்துத் தன் கூரிய மருப்பின்கண் ஏந்திச் சென்று வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட எழில் விளங்கு தாமரையாகிய நாண்மலர் போல என் நலங்கெடுத்தவனது தோளை மருவுதற்கு விருப்பமின்றி அஞ்சி உயிர் வாட்டமுற வருந்துகின்ற எம் நிலை குறித்து.
விரிப்பு:
இப்பாடல் புறப் பொருள் சார்ந்தது.
கன்னி யொருத்தியின் காதலன் அவளைக் கூடி மகிழ எண்ணி வந்தானாக அவள் காத்திருந்த இடத்திற்கு வேறு வேலையாக வந்த பிறனொருவன் அவளைக் கண்டு வலிந்து பற்றிச் சென்று அவள் நல்னுண்டு கற்பைச் சிதைத்தானாக, அதனை யறிந்த ஊரார் அவளை அவனுக்கே மணம்பொருத்த முற்பட்ட காலை அவள் வருந்தி யழுது கூறியதாக அமைந்தது.இப்பாட்டு.
நாண்மலரில் தேனுண்ண நயந்தவண்டு நீர்மடுவை நண்ணுமுன்னரே நீர்வேட்டு அங்குவந்த வயக்களிறு ஒன்று அம் மலரைப் பற்றியிழுத்துச்