பக்கம்:நூறாசிரியம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

391

சென்று வழியிடை நலஞ்சிதைத்தது போல நலங்கெடுத்தவன் என்று அப்பெண் வாயிலாகக் கூறப்பெறும் உவமையின் மூலம் மேற்கூறியாங்கு அவள் நலஞ்சிதைக்கப்பட்ட செய்தி புலப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்புகோயானே பொன்றுகோயானே-யான் தனித்திருந்து அழுவேனோ அன்றியான் இறந்தொழிவேனோ,

புலம்புதல் தனித்திருத்தல்; தனித்திருந்து அழுதல் புலம்பே தனிமை. பொன்றுதல் இறத்தல்,

நெருநல் வெண்முகை இன்று அவிழ்ம் - நேற்றைய வெண்ணிறப் போது இன்று மலரும்.

நெருநல்-நேற்று. முகை போது, அவிழ்ம்- அவிழும் ஊங்குப் பெரும் கள் படுஉம் - அதன் பால் மிகுந்த தேன் பொருந்தியிருக்கும்.

கள்-தேன். படுஉம்-படும்; பொருந்தியிருக்கும். வண்டினது எதிர்பார்ப்பின் மிகுதியைக் காட்டி நின்றது.

தூம்புநிறை உண்ம் எனக்கருதி - தும்பிக்கையால் உறிஞ்சி நிறைய உண்ணுதும் எனக் கருதி. -

தூம்பு துளைக்கை, வண்டின் தும்பிக்கை.

பொறிகுதியிறு கயந்தலைப்படுமுன்-புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவை நண்ணும் முன்னரே.

பொறி-புள்ளி. ஞிமிறு-வண்டு, கயம்-நீர்நிலை. தலைப்படுதல் வந்து சேருதல்.

நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு - நீர் உண்ணுதலை விரும்பி அங்குவந்த வலிமை சான்ற ஆண்யானை.

வேட்டு விரும்பி. நண்ணிய வந்து சேர்ந்த வயம்-வலிமை. களிறு ஆண்யானை,

வாங்கிக் கூர்ங்கோட்டு ஏந்தி - வளைத்துப் பற்றித் தன்கூரிய கொம்பிலே ஏந்திச் சென்று. கோடு- கொம்பு.

வழிஇடைஊழ்க்கும் - வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட ஊழ்த்தல் செவ்வியழிக்கப்படுதல்.

பொலங்கிளர்தாமரைப் புதுமலர்புரைய - எழில் விளங்கும் தாமரையாகிய நாண் மலர்போல.

பொலம் அழகு கிளர்தல்-விளங்குதல் நாள்மலர் அன்றலர்ந்த மலர்; புதுமலர். புரைய-போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/417&oldid=1211263" இலிருந்து மீள்விக்கப்பட்டது