பாவலரேறு பெருஞ்சித்திரனார்
391
சென்று வழியிடை நலஞ்சிதைத்தது போல நலங்கெடுத்தவன் என்று அப்பெண் வாயிலாகக் கூறப்பெறும் உவமையின் மூலம் மேற்கூறியாங்கு அவள் நலஞ்சிதைக்கப்பட்ட செய்தி புலப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்புகோயானே பொன்றுகோயானே-யான் தனித்திருந்து அழுவேனோ அன்றியான் இறந்தொழிவேனோ,
புலம்புதல் தனித்திருத்தல்; தனித்திருந்து அழுதல் புலம்பே தனிமை. பொன்றுதல் இறத்தல்,
நெருநல் வெண்முகை இன்று அவிழ்ம் - நேற்றைய வெண்ணிறப் போது இன்று மலரும்.
நெருநல்-நேற்று. முகை போது, அவிழ்ம்- அவிழும் ஊங்குப் பெரும் கள் படுஉம் - அதன் பால் மிகுந்த தேன் பொருந்தியிருக்கும்.
கள்-தேன். படுஉம்-படும்; பொருந்தியிருக்கும். வண்டினது எதிர்பார்ப்பின் மிகுதியைக் காட்டி நின்றது.
தூம்புநிறை உண்ம் எனக்கருதி - தும்பிக்கையால் உறிஞ்சி நிறைய உண்ணுதும் எனக் கருதி. -
தூம்பு துளைக்கை, வண்டின் தும்பிக்கை.
பொறிகுதியிறு கயந்தலைப்படுமுன்-புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவை நண்ணும் முன்னரே.
பொறி-புள்ளி. ஞிமிறு-வண்டு, கயம்-நீர்நிலை. தலைப்படுதல் வந்து சேருதல்.
நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு - நீர் உண்ணுதலை விரும்பி அங்குவந்த வலிமை சான்ற ஆண்யானை.
வேட்டு விரும்பி. நண்ணிய வந்து சேர்ந்த வயம்-வலிமை. களிறு ஆண்யானை,
வாங்கிக் கூர்ங்கோட்டு ஏந்தி - வளைத்துப் பற்றித் தன்கூரிய கொம்பிலே ஏந்திச் சென்று. கோடு- கொம்பு.
வழிஇடைஊழ்க்கும் - வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட ஊழ்த்தல் செவ்வியழிக்கப்படுதல்.
பொலங்கிளர்தாமரைப் புதுமலர்புரைய - எழில் விளங்கும் தாமரையாகிய நாண் மலர்போல.
பொலம் அழகு கிளர்தல்-விளங்குதல் நாள்மலர் அன்றலர்ந்த மலர்; புதுமலர். புரைய-போல.