பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - T- == அன்புள்ள இளவரசனுக்கு. எண்ணிய அடிகள், விரைவில் அம்மொழியைக் கற்றுக் கொண்டு, அரசனோடு உரையாடி வெற்றி கண்டார் என அறிகிறோம். இதை நாம் வெறுக்கவில்லையே! பாராட்ட வன் றோ செய்கிறோம், தமிழன் எதையும் விரைவிற் கற்றுவிடுவான் என்று. ஆனால் தமிழை மறந்து செல்லும் போதுதான் தவிக்கிறது நெஞ்சம் ! குமரகுருபரர் தமிழை மறந்து பிற மொழியைப் பயில வில்லையே. நூல்கள் இயற்றும் அளவு தமிழ் கற்றார். அதன் பின், தமது தேவைக்காக அவன் மொழியைக் கற்றார். நம் செட்டி நாட்டு மக்கள் பலர், மலேயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு வணிகத்தின் பொருட்டுச் செல்வர். அங்கங்கே பேசப்படும் மொழியைத் தெரிந்து கொள்வர். அவர்களுக்கு அவர்கள் தொழிலுக்குத் தேவைப்பட்டது. கற்றுக்கொண்டனர், யாரும் திணிக்க வில்லையே செட்டி நாட்டார் அனைவரும் அம்மொழிகளை கற்கவில்லையே. தமிழுணர்ந்த பின்னரே பிற மொழிகள் பயிலலாம். அதுவும் நாம் விரும்பும் மொழிகளேயன்றிப் பிறர் ஆனைக் கோ அச்சுறுத்தலுக்கோ கட்டுப்பட்டுப் பிற மொழிகளை ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. மறைமலை யடிகள், தேவநேயப் பாவாணர், கா. அப்பாதுரையார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவர்களெல்லாம் பன்மொழிப் புலவர்கள். ஆனால் அவர்கள் தமிழைவெறுத்து விடவில்லையே! தமிழ் வளர்ச்சிதானே அவர்தம் குறிக்கோளாக இருந்தது. பிற மொழிப் பயிற்சியும் தமிழுக்கு ஆக்கந்த ருமேல் வேண் டற்பா லது; வரவேற்கத்தக்கது. தமிழுக்கு ஊறு நேருமேல் அப்பயிற்சி அறவே கூடாது. உன் தந்தை முடியரசன்