பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| படைப்பதெப்படி? \— - - ---- مییجیسا | அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். கவிதை எழுத இலக்கணம் வேண்டுமா ? என்ற அய்ய வினாவொன்றை யெழுப்பி, அதற்கு அமெரிக்க நாட்டறிஞர் கூறியதை மேற்கோள் காட்டியிருந்தாய். நன்று; நன்று அவர் கூறியதை நன்கு ஊன்றிப் பார்த் தாயா ? “இலக் கணத்திற்கு க் கட்டுப் பட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்” என்பது அவர் கூற்று. நானும் அதனை ஒப்புக் கொள்ளுகிறேன். இலக்கணத் திற்குக் கவிஞன் கட்டுப்படக்கூடாது. கவிஞனுக்குத் தான் இலக்கணம் கட்டுப்பட வேண்டும் என்பது அதன் கருத்து. இதனை நான் முன்னர் எழுதிய மடலிற் கூறியிருக்கிறேன். அதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ளாது இலக்கணமே வேண்டுவதில்லையென முடிவு கட்டி விட்டாயே ! கவிஞன் எ ப் படி இ லக் கணத் தைத் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்கிறான் என்பதை விளக்கிக் காட்டுகிறேன்.