பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - அன்புள்ள பாண்டியனுக்கு... தன்னைத் தாழ்த்திக் கீழாக்குவானும் அவனேயாகின்றான். பிறப்பு, மனிதன் உயர்வுக்குந் தாழ்வுக்குங் காரணமன்று. ஒருவன் கற்ற கல்வியை மறந்துவிடுவானாயின் அஃது அவன் குலத்தைக் கெடுத்துவிடாது. ஒழு க்கத்தை மறந்துவிட்டால், அது குலத்தையே கெடுத்துவிடும். நம் வாழ்நாளிலேயே பலரைக் கண்டிருக்கிறோம். செல்வத் தாலும், பிறப்பாலும் உயர்ந்தவராகக் கருதப்பட்டவர்கள், ஒழுக்கக் கேட்டால் தாழ்நிலை யடைந்து, மதிப் பிழந்து, செல்லாக் காசுகளாக ஒதுக் கப்பட்ட தைக் கண்டிருக் கிறோம். அதனால் கற்ற கல்வியை மறந்தாலும் மறக்கலாம்; பெற்ற ஒழு க் கத் தை மறத்தல் கூடாது; அதனைப் பேணிக் காக்க வேண்டும். ஒழுக்கக் கேடர்கள் உயர்வு பெறாததோடு, தாழ்வையும் அடைந்துவிடுவர். இதனை யஞ் சியே, சான்றோர் ஒழு க்கத்திற் குறையாமல் நிற்கின்றனர். ஒழுக்கக் கேட்டால் பலவகைத் தீமைகளும் சார்ந்து விடுகின்றன. அடாப் பழிகளையும் அடைய நேரிடுகிறது. ஒழுக்கங் குன்றியவர்க்கு நண்பர்கள் உண்டாதல் அரிது; மாறாகப் பகைமையே வளர்ந்தோங்கும். அப்பகைமை காரணமாகத் தகாத பழியை அவர் மேற் சுமத்தலுங் கூடும். அதனை ஆய்ந்து பாராமல் உலகமும் நம்பிவிடும். ஒழுக்கமின்மை காரணமாக எய்தாப் பழியும் எய்த வேண்டி வரும். இங்கே ஒரு குறட்பாவைக் கூற விரும்புகின்றேன்.