பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= கவியரசர் முடியரசன் செய்யாது சோம்பிக்கிடப்பர். இவரால் எதையுமே சாதிக்க o டியாது. எவ்வளவுக் கெவ்வளவு முயல்கிறோமோ. அவ்வளவுக் கவ்வளவு நன்மை வந்தே திரும். தெய்வத்தான் காதெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும். மனத்தளர்ச்சியின்றி, இடைவிடாது ஒருவன் முயலுவா iனாகில், செல்வம் அவனுடைய வீட்டைத் தேடிக்கொண்டு வரும். உயர்ந்திருந்த நாடுகள் சோம்பலால் தாழ்வுற்றதையும், வீழ்ந்துகிடந்த நாடுகள் முயற்சியால் மேம்பாடுற்று விளங்குவதையும் உலக வரலாறு நமக்குத் தெளிவாக வுணர்த்திக் கொண்டே யிருக்கிறது. முயற்சியால் எத்தகைய அருஞ்செயல்களையுஞ் செய்து முடிக்கலாம். முடியாது என்பது சோம்பேறிகளின் சொல் என, உலக வீரன் நெப்போலியன் உரைத்ததையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். சோம்பலிற் சுகங் காணும் ஒருவன், தன் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் துயர் காண நேரும்; எதிர்காலம் காரிருளாற் சூழப்பட்டு, இருண்டு காணப்படும். ஒருவனுடைய வாழ்வு, எவ்வளவுதான் உயர்ந்திருப் பினும், ஊரறிய உலகறியச் சிறந்திருப்பினும், நந்தா விளக்குப் போல் ஒளிவிட்டுக் கொண்டிருப்பினும், சோம்பலென்னும் இருள் புகுந்து விடுமானால் ஒளி குறையும்; விளக்கும் அணைந்து விடும். குடியைக் கெடுக்கும் ஆற்றல் அச்சோம்பலுக்குண்டு. குடியுயர வேண்டுமென விழைவோன் சோம்பலை அடியோடு நீக்கிவிட வேண்டும்; நீக்க வில்லையானால் அவன் குடிமடிந்தொழிவது திண்ணம்.