உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= = - கவியரசர் முடியரசன் --- - - - - – - முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதனைக் கிள்ளி யெறிந்தாற்றான் பணி வென்னும் நல்லுணர்வு தளிர்த்துச் செழித்து வளரும். கல்வியாற் செருக்குணர்வு தோன்றலாம்; குடிப்பிறப்பாற் செருக்குணர்வு தோன்றலாம்; கொடையால் தோன்றலாம்; வீரத்தால் தோன்றலாம்; செல்வப்பெருக்கால் தோன்றலாம்; ஏனைய புகழ் முதலிய வற்றாலும் தோன்றலாம். இவற்றுள் எந்த வகையாற் சிறப்புற்றிருப்பினும் அதனோடு சேர்ந்து வளரும் அந்தச் செருக்கை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்; பணிவுடன் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றோராயினும், குடிப் பிறந்தோராயினும், செல்வ ராயினும், வீரராயினும், பிறராயினும் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளுவது, பொதுவாக எல்லார்க்குமே நன்மை பயக்குஞ் செயலாகும். இவருள்ளும் செல்வச் சிறப்புடைய ஒருவர், பணிவுடைமையைக் கற்றுக் கொள்ளுவாரானால், அவர்க்கு மேலுமொரு செல்வம் வந்து சேர்ந்ததுபோலாகும். அடக்கமுடையவன் எப்பொழுதும் உயர்நிலை அடைவான்; அடங்காது அலைபவன் தாழ்நிலையில் வீழ்ந்து, மீளமுடியாது, துயருறுவான். இவ்வாறு மேனிலை எய்துபவரையும், தாழ் நிலையில் உறுபவரையும் நாட்டிலே கண்டு வருகிறோம். அதனால் அடக்கத்தை உயர்ந்த செல்வம்போற் கருதிக் காத்து வரவேண்டும். அடங்கி வாழ்வதுதான் அறிவுடைமை என்று கருதி, முறைப்படி நடந்துவரும் ஒருவன் எல்லாராலும் மதிக்கப்படும் பெரும் பேற்றினை அடைவான். தன்னிலையினின்று வேறுபடாது,