தந்தையும் மகளும்/142⁠

விக்கிமூலம் இலிருந்து


142அப்பா! கொள்ளிவாய்ப் பிசாசு இருப்பதாகக் கூறுகிறார்களே, அது உண்மைதானா?

அம்மா! சாதாரணப் பிசாசும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசும் கிடையாது. பிசாசு உண்டு என்று எண்ணுவதற்குக் காரணம் வெறும் பயம்தான்.

அம்மா! சதுப்பு நிலங்களில் ஒருவித வாயு உண்டாகும். அதனுடன் பாஸ்பரஸ் கலந்த ஹைட்ரஜன் சேரும்போது அது தானாகவே தீப்பற்றிக்கொள்ளும். இரவில் தூரத்திலிருந்து பார்க்கும்போது அதன் சுடர் அங்கும் இங்கும் ஆடுவதுபோல் தோன்றும. அதைக் கண்டுதான் விஷயம் அறியாதவர்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அஞ்சுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/142⁠&oldid=1538369" இலிருந்து மீள்விக்கப்பட்டது