தந்தையும் மகளும்/141⁠

விக்கிமூலம் இலிருந்து


141அப்பா! வெண்மை நிறமான நிலக்கரியும் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! உண்டு. ஆனால் அது உண்மையில் நிலக்கரி அன்று. நிலக்கரி என்பது நெடுங்காலத்துக்கு முன்னிருந்த காடுகள் அழிந்து பூமிக்குள் இருந்து கரியானதாகும். அது அடுப்புக் கரி போலவே கறுப்பு நிறமுடையதாகும். அது சுடர்விடாது, அதிகமாகப் புகையவும் செய்யும்.

ஆனால் வெண்மையான நிலக்கரி என்று கூறுவது பூமியை வெட்டி எடுக்கும் பொருளன்று, மனிதரால் செய்யப்படும் பொருளேயாகும். அதை ரசாயனிகள் மெட்டால்டிஹைட் என்று கூறுவார்கள்.

அது வெண்மை நிறமான படிகப்பொடி. அதைக்கட்டியாகச் செய்வார்கள். அதை மேசைமீது வைத்து தீக்குச்சி கிழித்துவைத்தால் நீலநிறச் சுடர்விட்டு எரியும். புகையும் கிடையாது, சாம்பலும் கிடையாது. அது இளகி எரிவதில்லை, உஷ்ணம் பட்டமாத்திரத்திலேயே ஆவியாக எரிகிறது. அதனால் சுடர் அந்தக் கட்டிக்கு மேலாகவே எரியும். சுடர்க்கும் கட்டிக்கும் இடைவெளியிருக்கும். சுடடர் எரியும்போது கட்டியைத் தொட்டு அழுத்தினால் அணைந்துபோகும். கை சுடாது. எரியும்போது நாற்றம் உண்டாவதில்லை. ஆயினும் அந்தக் கட்டியில் நறுமணப் பொருள் சேர்த்தம் செய்வதுண்டு. அது நீரில் கரையாது, அதனால் நீரில் மிதந்து கொண்டும் எரியும்.

இதை ஸ்விட்ஜர்லாந்து நாட்டில் ஒரு ரசாயனக் கம்பெனியார் செய்து வருகிறார்கள். மேனாட்டில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/141⁠&oldid=1538368" இலிருந்து மீள்விக்கப்பட்டது